"மோடி என்று கோஷமிடும் இளைஞர்களை அறைய வேண்டும்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

x

மோடி.. மோடி என்று கோஷமிடும் இளைஞர்களின் கன்னத்தில் அறைய வேண்டும் என கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் அமைச்சர் சிவராஜ் தங்கடகி, காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, 2 கோடி பேருக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, யாருக்காவது வேலை கொடுத்தாரா என்று கேள்வி எழுப்பினார். இளைஞர்கள் வேலை கேட்டால் பக்கோடா விற்கச் சொல்கிறார்கள் என்று கூறிய அமைச்சர் சிவராஜ், இன்னும் மாணவர்கள் மோடி மோடி என்று சொன்னால் அவர்களை அறைய வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்