"கொள்ளையடிப்பது இல்லை ​​மக்களை தூண்டுவது.." - டார்கெட் 370... அடித்து சொன்ன PM மோடி

x

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டுமே 370 இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம், ஜபுவாவில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு உரையாற்றிய பிரதமர், இதைத் தெரிவித்தார். ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடிப்பது, ஆட்சியில் இல்லாதபோது ​​மக்களை போராட வைப்பது ஆகிய இரு வேலைகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது என்று அவர் கூறினார். மத்திய பிரதேசத்தில், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ், மக்களவைத் தேர்தலிலும் தோற்கடிக்கப்படுவது உறுதி என்றும் அவர் கூறினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டுமே 370 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்