"எரியட்டும் என பிரதமர் நரேந்திர மோடி விட்டு விட்டார்.." - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

x

ராஜஸ்தான் மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்கமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ஆதி வாசிகளை பாஜக தற்போது வனவாசி என குறிப்பிடத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். வனவாசிகள் காடுகளில் வாழ வேண்டும் என பாஜக நினைப்பதாகவும், நிலத்தை கைப்பற்றி அதானிக்கு கொடுப்பதாகவும் ராகுல்காந்தி புகார் கூறினார். இது உங்கள் நாடு என்றும் உங்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்