"மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை.." - கனிமொழி எம்.பி.

x

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 14ஆம் தேதி திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கனிமொழி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களை ஏமாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். இந்தியா கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது என்ற கனிமொழி, மக்கள் இனியும் ஏமாறத் தயாராக இல்லை என்று கூறினார். திமுக மகளிர் மாநாட்டில், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா குறித்தும், பெண்கள் வேலைவாய்ப்பு குறித்தும் விவாதிக்கக்கூடிய மாநாடாக இருக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்