"தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்"சொல்லி அடிக்கும் ஓபிஎஸ்... அடுத்த மாஸ்டர் பிளான் ரேடி...

x

நாடாளுமன்றத் தேர்தலில் தனது அணி போட்டியிடும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக சார்பில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்ற நிலையில், சென்னை வேப்பேரியில் ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், காஞ்சிபுரத்தில் அடுத்த மாதம் 3ஆம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் தன்னுடைய அணி வெற்றிபெறும் என்றும், அதன்பின்னர், கட்சி தானாக வரும் என்றும் கூறினார். நாடளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்த ஓ.பி.எஸ்., தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் இயக்கம் என்பதை சுற்றுப்பயணம் நிரூபிக்கும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்