ஓபிஎஸ்-யிடம் கோரிக்கை வைத்த மக்கள் - ஸ்பாட்டிலேயே கொடுத்த உறுதி!

x

முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், வடக்குபுதுக்குடி உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், மீனவர்கள் எலுமிச்சம்பழம் கொடுத்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது, ஜெகதாப்பட்டினத்தில் பள்ளி மற்றும் கோவில் அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஓபிஎஸ் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்