மாலையுடன் மேடைக்கு வந்த நபர்... கையால் தடுத்து.. - கோபத்தால் மாறிய ஓபிஎஸ் முகம்

x

நாகர்கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. அ.தி.மு.க தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு கன்னியாகுமரி மாவட்ட ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளர் நாஞ்சில் கோலப்பனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கூட்டம் நடைபெற்றபோது, திடீரென மேடைக்குச் சென்று ஆளுயர மாலை மற்றும் மலர் கிரீடத்தை ஓ.பன்னீர்செல்வத்திற்கு அணிவித்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்