"மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும்..." - நத்தம் விஸ்வநாதன் அதிரடி

x

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் இன்று முதல் 10ம் தேதி வரை மண்டல வாரியாக சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் வேலப்பன் சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள், விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், வணிகர் சங்கங்கள், மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிமுக போராடும் என்று உறுதியளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்