காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டத்தில் பெண் செய்த சம்பவம்

x

காங்கிரஸ் கட்சிக்கு, ஆயிரத்து 823 கோடி ரூபாய் அபராதம் செலுத்த கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகை வருமானவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரது புகைப்படங்களை கையில் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் பெண் நிர்வாகி ஒருவர் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மதுரையில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்