நாகாலாந்தில் தன் முதல்நாள் யாத்திரை... மக்களோடு மக்களாக ராகுல்

x

மணிப்பூர் மாநிலம் தெளபாலில் இருந்து நேற்று முன்தினம் தனது யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் தனது இரண்டு நாள் யாத்திரையை முடித்துக் கொண்டார். மூன்றாவது நாளான இன்று, நாகாலாந்து மாநிலத்தில் இருந்து தனது யாத்திரையை தொடங்கியுள்ளார். நாகாலாந்து மாநிலம் கோஹிமா பகுதியில் இருந்து யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, அங்கு உள்ளூர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். மேலும், கோஹிமாவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு உயிர்நீத்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்