காங்கிரஸ் வேட்பாளர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பரபரப்பான சத்தீஸ்கர்

x

சத்தீஸ்கரில் காங்கிரஸ் வேட்பாளர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் 17ம் தேதி, 2ம் கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், நவாகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குருருத்ர குமார், ஜல் கிராமத்தில் பிரச்சாரம் முடித்து திரும்பியபோது, அவரது பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்