தேர்தல் அதிகாரியை ஒருமையில் திட்டிய EX அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்?

x

தேர்தல் கண்காணிப்பு அதிகாரியை ஒருமையில் திட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமானோர் கார்களில் பிரச்சாரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு 10 கார்களுக்கு மேல் செல்ல அனுமதி இல்லை என தேர்தல் கண்காணிப்பு அதிகாரி தெரிவித்ததால் கோபமடைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் அதிகாரியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்