பூதாகரமாக வெடித்த பிரதமரின் ஒரே பேரணி.. வைரலான சர்ச்சை போட்டோ.. அல்லோகலப்படும் கோவை..

x

கோவையில் பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி நிர்வாகத்தின் மீது, சிறார் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் திங்கட்கிழமை மாலை பாஜக சார்பில் நடந்த ரோடு ஷோ நிகழ்வில், பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ சாய்பாபா வித்யாலயா அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வைக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், விசாரணை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டார். அதனடிப்படையில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கையை, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வழங்கினர். இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகார் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் மீது சிறார் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவர்களை அழைத்துச் சென்ற மற்ற தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்