நாடாளுமன்றத்தில் மோடி பின் வாங்கி விட்டார்... ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

x

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்ததொடர் கூட்டப்பட்டதாக தெரிவித்த ராகுல் காந்தி, மக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அது ஒத்தி வைக்கப்பட்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். மகளிர் இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்த பாஜக அரசு நினைப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி நம்மைப் பொறுத்தவரை மகளிர் இட ஒதுக்கீடு இப்போதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் ஓபிசி பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள பிரதமர் மோடி அச்சப்படுவது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்


Next Story

மேலும் செய்திகள்