"எல்லாரும் உதயநிதியாக மாறி அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்" - ஆவேசமாக பேசிய அமைச்சர் உதயநிதி

x

ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறி போராடினால் தான் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட முடியும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீர‌ர்கள் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. அப்போது, சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்க முன்வந்த நிலையில், முன்பணமாக 25 லட்சம் ரூபாயை சிவசங்கர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, நீட் தேர்வு ரத்து ஆகும் வரை அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்