மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ரத்த கட்டு மற்றும் பித்தப்பையில் கொழுப்பு கட்டி இருப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

x

இருதயவியல், நெஞ்சக பிரிவு, குடலியல், நரம்பியல், பொது மருத்துவர், இரத்த குழாய் நிபுணர்கள் என பல துறை சார்ந்த மூத்த மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். அனைத்து பரிசோதனைகளின் முடிவுகளும் இன்று வந்ததை அடுத்து எந்த மாதிரியான சிகிச்சைகளை அவரது உடல் ஏற்கும் என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ரத்த கட்டு ஏற்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கழுத்து வலி, முதுகு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பித்தப்பையில் கொழுப்பு கட்டி இருப்பதால் அதனை அகற்ற அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து அலோசித்து வருவதாகவும்

மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்