பொங்கல் பரிசு..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரபரப்பு தகவல் | Pongal 2024 | DMK

x

கடலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி உள்ளது. இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புகள், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் கொள்முதல் செய்யப்படும் என்று கூறினார். கூட்டுறவுத்துறையுடன் வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து, எந்தவித முறைகேடும் இல்லாத வகையில், இடைத்தரகர்கள் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்