அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அதிரடி உத்தரவு

x

புதிய மின்மோட்டர் பம்பு செட் நிறுவுவதற்காக விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பழைய திறன்குறைந்த மின் மோட்டார் பம்பு செட் பயன்படுத்துவதால் மின்சார பயன்பாடு அதிகரிப்பதுடன், பாசன நேரம் அதிகரித்து, சாகுபடிக்கான செலவும் உயருவதால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், உழவன் செயலி மூலமாகவோ, பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளம் வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்