இலங்கை அதிபரை சந்தித்த மம்தா..இது தான் காரணமா ?

x

கொல்கத்தாவில் நடைபெறும் வங்காள உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உலகளாவிய வர்த்தக மாநாடு, வரும் நவம்பர் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ரணில் விக்ரமசிங்கை சந்தித்த மம்தா பானர்ஜி, வர்த்தக மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது, இலங்கை வருமாறு மம்தா பானர்ஜிக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்