"ஈபிஎஸ்-ஐ வைத்து கட்சிக்காரங்களே சீரியஸா காமெடி பண்றாங்க..? மேடையில் வைத்து கலாய்த்த ராதிகா

x

இந்தியா கூட்டணி, குடும்பக் கட்சிகளும், ஊழல் கட்சிகளும் உள்ள கூட்டணி என்றும், ஊழல்வாதிகளை காப்பாற்றுவது அவர்களின் நோக்கம் என்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து அவர் திருமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய நட்டா, இந்த பூமி சனாதன தர்மத்தை தாங்கி நிற்கும் பூமியாக உள்ளதாக கூறினார்.

முன்னதாக பேசிய வேட்பாளர் ராதிகா சரத்குமார், தமிழ்நாட்டில், தி.மு.க. கதை எழுதுவதைப் போல நாட்டிற்கே கதை எழுத பார்க்கிறார்கள் என்று விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்