"மோடி கேரண்டி - 24 காரட் தங்கம்" - ராஜ்நாத் சிங் புகழாரம்

x

பாஜகவின் தேர்தல் அறிக்கை மோடியின் உத்தரவாதம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று இந்திய அரசியலில் இந்த அறிக்கை 24 காரட் தங்கமாகக் கருதப்படுகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

புகழாரம் சூட்டியுள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதற்கு முந்தைய தேர்தல்களின் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்த ராஜ்நாத்சிங், சொல்வதைச் செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த வாக்குறுதிகள் 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தீர்மானத்தை வடிவமைக்கும் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்