பானை சின்னம் கிடைத்ததும் - திருமா சொன்ன பாயிண்ட்...

x

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, சின்னம் வழங்கும் நிகழ்வு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணி மேரி ஸ்வர்ணா சின்னங்களை ஒதுக்கீடு செய்தார். அப்போது, திமுக கூட்டணியில், விசிக சார்பில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேறு யாரும் பானை சின்னத்தை கேட்காத‌தால், விசிகவுக்கு ஒதுக்கீடு செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதே போன்று, விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்