"உங்க பாதம் தொட்டு கேட்கிறேன்" - ஆவேசம் பொங்க பேசிய கதிர் ஆனந்த்

x

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். செம்பேடு, சதுப்பேரி, சிருக்காஞ்சி, தெல்லூர், சேக்கனூர், ஊசூர், அத்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கல்வி கடன் தள்ளுபடி, சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் கூறி அவர் வாக்கு சேகரித்தார். மேலும் திமுக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்