பாஜகவுக்கு `தாமரை’ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கு.. ஐகோர்ட் தீர்ப்பு

x

தாமரை சின்னத்தை பாஜகவிற்கு ஒதுக்கியதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தாமரைச்சின்னத்தை பாஜகவிற்கு ஒதுக்கியது தொடர்பாக, நாமக்கல்லை சேர்ந்த, சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனருமான ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். தாமரை தேசிய சின்னமா அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், சில மாநில அரசுகள் அதை மாநில சின்னமாக வும் அதை அறிவித்துள்ளன. மேலும், தாமரை மதச் சின்னம் என்பதால், அதை பாரதிய ஜனதாவிற்கு ஒதுக்கியது தவறு என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கான விசாரணை முடிந்த நிலையில், வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்