இரண்டாம் கட்ட தேர்தல் - ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ

x

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் அளிக்க முயற்சித்து வருவதாகவும், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் அவற்றை காப்பாற்ற போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். காஷ்மீர் முதல் குமரி வரையும், மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையிலும் யாத்திரை மேற்கொண்டு, மக்களின் மனதை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களுக்கானது என்றும், இது மக்களின் குரல் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் 20 முதல் 25 பேர் மட்டுமே செல்வந்தர்களாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் மூலம் கோடிக்கணக்கானோர் லட்சாதிபதிகளாக ஆக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், காங்கிரசுக்கு வாக்களித்து அரசியல் சாசனத்தை காப்பாற்றுமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்