வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார்

x

நீலகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேட்பாளர் ஜெயகுமார், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க சென்ற ஜெயக்குமாருக்கு, கட்சியினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, புஞ்சை புளியம்பட்டி பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த வேட்பாளர் ஜெயக்குமார், தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்