மினி வேனுக்குள் பெட்டி பெட்டியாக தங்க, வைர நகைகள்... வளைத்து பிடித்த பறக்கும் படையினர்

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரங்களை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோரிமேடு எல்லை பகுதி சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும்படை குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மினிவேனை சோதனை செய்ததில், தங்க நகைகள் மற்றும் வைரங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், புதுச்சேரியில் உள்ள 4 பிரபல நகைக் கடைகளுக்கு நகைகள் எடுத்துச் செல்லப்படுவதும், ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாதததும் தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com