"வாக்காளர்கள் பட்டியலில் பெயர் நீக்கம்" - எல்.முருகன் பரபரப்பு பேட்டி

x

திருப்பதி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வரப்பிரசாத் ராவ், வேட்பு மனுவை திருப்பதியில் தாக்கல் செய்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் இருந்தார். வேட்புமனு தாக்களுக்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய எல்.முருகன், தேசிய அளவில் பாஜக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறினார். ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவரான ராகுல்காந்தி, வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி கூறியது சரியான கருத்து இல்லை என்றும் அவர் கூறினார். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்த நடுநிலை வாக்காளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு வாக்காளர்கள் ஆகியோரின் பெயர்களை தமிழ்நாட்டில் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று எல்.முருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்