ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்.. கே.எஸ். அழகிரி அறிவிப்பு

x

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வரும் 27ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் இருவரிடையே பேதம் கற்பிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மலிவான அரசியல் என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்ட‌து என்றும் விமர்சித்துள்ளார். இதை கண்டித்து, வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு சின்னமலை ராஜிவ் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்