`வென்று செங்கோட்டைக்கே சென்றது போல..` - வரவேற்பை பார்த்ததும் கிருஷ்ணசாமி சொன்ன வார்த்தைகள்

x

தென்காசி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சி தலைவருமான கிருஷ்ணசாமி கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புண்னையாபுரம், இடைகால், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரசாரம் மேற்கொண்ட அவர், செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததாகவும், தான் வெற்றி பெற்று டெல்லி செங்கோட்டைக்கே சென்றுவிட்டதுபோல எண்ணுவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்