உச்சகட்ட பரபரப்பில் கொடநாடு வழக்கு.. சிபிசிஐடி கொடுக்க போகும் அறிக்கை - ஆஜராக போகும் அந்த 10 பேர்...

x

இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த10 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் பல கட்டங்களாக விசாரணை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

அப்போது, வழக்கு விசாரணையின் இடைகால அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சமர்ப்பிக்கவுள்ளது.

முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, தீபு, உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.

வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் கூடுதல் கால அவகாசம் கேட்கவும் சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்