வேலூரில் அதிமுக vs பாஜக உச்சகட்ட போர்.. மோதும் கே.சி.வீரமணி.. ஏ.சி.சண்முகம்

x

``KC வீரமணி முதுகில் குத்திவிட்டார்’’ ``நீங்கள் தோற்பது உறுதி AC சண்முகம்’’ - வேலூரில் அதிமுக vs பாஜக உச்சகட்ட போர்

கடந்த தேர்தலில் தனக்கு வரவேண்டிய 30 ஆயிரம் வாக்குகளை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சூறையாடிவிட்டதாக, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஏ.சி.சண்முகம், கடந்த தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டு வைத்து கே.சி.வீரமணி தனது முதுகில் குத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க. கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவது உறுதி என்றார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் ஏ.சி.சண்முகம் தோல்வி அடைய பா.ஜ.க. கூட்டணிதான் காரணம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்