``கரூரை விட்டு அண்ணாமலை கோவையை செலக்ட் செய்த பின்னணி இதான்'' - போட்டு தாக்கும் காயத்ரி ரகுராம்

x

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அக்கட்சி மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் செய்தார். அப்போது, அண்ணாமலை குறித்து விமர்சித்த அவர், கரூரில் போட்டியிட்டால் தான் ஜெயிக்க மாட்டோம் என அவர் கோவைக்கு சென்று விட்டதாக கூறினார். எனினும், அண்ணாமலை கோவையிலும் ஜெயிக்க மாட்டார் எனக் கூறிய காயத்ரி ரகுராம், அண்ணாமலை திரும்பி கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனக் கூறினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக எதையும் செய்யவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்