கன்னோஜ் தொகுதியில் வேட்பாளர் மாற்றம்

x

தேஜ் பிரதாப் சிங் யாதவுக்குப் பதிலாக கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், போட்டிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்பி தேஜ் பிரதாப் சிங் யாதவை, கன்னோஜ் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது.

மறு புறம், பாஜக, கன்னோஜ் தொகுதியின் தற்போதைய எம்பி சுப்ரதா பதக்கிற்கு வாய்ப்பு

வழங்கியுள்ளது. இந்த நிலையில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார்களா?என்று, செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதில் அளித்த அகிலேஷ் யாதவ், மக்கள், தங்கள் மனதில் முடிவு செய்து விட்டனர் என்று கூறிவிட்டுச்சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்