மேயர் தேர்தலில் ட்விஸ்ட் கொடுத்த கவுன்சிலர்...`ஷாக்' கொடுத்த பா.ஜ.க

x

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகராக விளங்கும் சண்டிகர் மாநகர மேயர் தேர்தல், இன்று நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு அதிக அளவிலான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்த போதிலும், அதை தோற்கடிப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து களமிறங்கின. இந்த நிலையில், பாஜக வின் வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியின் மேயர் வேட்பாளர் 12 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தான் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பதிவான 8 வாக்குகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டதால் 16 வாக்குகளைப் பெற்ற பாஜகவின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்