அதிகரித்த முதுகு வலி.. சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்ட ஓ.பி.எஸ்

x

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு ஒரே வாரத்தில் சிகிச்சையை முடித்து கொண்டு தேனி திரும்பினார். முதுகு வலி மற்றும் இடுப்பு வலி காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பன்னீர்செல்வத்திற்கு முதுகு வலி மீண்டும் அதிகரித்தது. இதனிடையே, தேவர் ஜெயந்தி விழா முடிவடைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம்

மருத்துவ சிகிச்சைக்காக சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையிலேயே தற்போது சிகிச்சை பெற உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்