"இதை அறிவிக்கா விட்டால் ஆன்மா மன்னிக்காது" - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

x

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

இது தொடர்பான அவரது அறிக்கையில், இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கப்படவுள்ளதை வரவேற்றுள்ளார். சென்னையில் தனக்கு சிலை அமைக்கப்படுவதை உணர்ந்தால் எந்த அளவில் அவர் மகிழ்ச்சி அடைவாரோ, அதைவிட 100 மடங்கு, சாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என தெரிவித்துள்ளார். வி.பி.சிங் குரலாக தான் ஒலித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தற்போதாவது ஆணையிட வேண்டும் என்றார். இதனை அறிவிக்க வி.பி.சிங்கின் நினைவு நாளை விட சிறந்த சிறந்த தருணம் இருக்க முடியாது எனவும், அப்படி அறிவித்தால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும், இல்லையேல் மன்னிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்