"மகிழ்ச்சியான வாழ்வு".. கல்லூரி மாணவர்களுக்கு ஆளுநர் அட்வைஸ்

x

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கல்லூரி மாணவர்களுடன் உரையாடினார்..

நீலகிரி மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார். அங்கு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகை தந்த அவர், அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை குறித்து கேட்டறிந்தார். அப்போது, கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் அங்கு வந்திருந்த நிலையில் அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுடன் பேசிய அவர் இயற்கையுடன் இணைந்து வாழ்வது மகிழ்ச்சியான வாழ்வு எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்