"அரசு போட்டித்தேர்வு வினாத்தாள் கசிவு... கண்டுகொள்ளாத PM மோடி" - அசோக் கெலாட் குற்றச்சாட்டு

x

பாஜக ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு போட்டித்தேர்வு வினாத்தாள் கசிந்து மோசடி நடைபெற்று இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். ஹைதராபாத்தில் பிரசாரத்தின்போது பேட்டி அளித்த அவர், வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான் மீது குற்றம்சுமத்தும் பிரதமர் மோடி, தாங்கள் ஆளும் மாநிலங்களில் இதேபோன்று நடந்திருப்பதை கண்டுகொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். பாஜகவும், பி.ஆர்.எஸ்ஸும் இணைந்து அரசியல் செய்வதாக அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்