"தர்காவை விட்டு வெளியே போ" - பாஜக நிர்வாகி வழிபட கடும் எதிர்ப்பு - நாகூர் தர்காவில் பரபரப்பு

x

நாகூர் தர்காவில் பிரார்த்தனை மேற்கொண்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமிக்கு இஸ்லாமியர்கள் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகூருக்கு வந்த அவர், தர்காவில் உள்ள ஆண்டவர் சமாதியில் வழிபாடு செய்தார். இதை அறிந்து அங்கு வந்த இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர், வேலூர் இப்ராஹிமை தர்காவை விட்டு வெளியேறும்படி கூச்சலிட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவரை போலீசார் பத்திரமாக வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்