ரூ.1000 வராத 56.60 லட்சம் பேருக்கு இன்று... மொபைலுடன் தயாராக இருங்க மக்களே

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 56.60 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும் எனவும் வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்