"புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்" - திமுக வேட்பாளர் பிரகாஷ் கொடுத்த முக்கிய வாக்குறுதி

x

ஈரோடு தொகுதியில் புற்று நோய்க்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வலியுறுத்துவேன் என திமுக வேட்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ், ஐந்து மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும், புற்றுநோய் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து வருவதால், ஈரோடு தொகுதியில் புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் எனவும் பொது மக்களிடையே பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்