கரூரில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை | KARUR | ED RAID

x

கரூரில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை | KARUR | ED RAID

கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம், தனியார் டைல்ஸ் ஷோரூம் உரிமையாளர் வீடு மற்றும் கடை ஆகிய 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நேற்று மாலை சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நிறைவடைந்தது. சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான "தனலட்சுமி செராமிக்ஸ்" என்ற டைல்ஸ் கடை மற்றும் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இதையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து 23 மணி நேரமாக நடைபெற்று வரும் இந்தச் சோதனை, 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்