"சிதம்பரத்தில் கண்டிப்பாக மாற்றம் வரும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி | BJP

x

சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக ஓசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹெலிபேட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இறங்கி, கார் மூலம் பொதுக்கூட்டத்திற்கு வந்தார். சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்