"ED, IT-க்கு பயப்படாதவன் இந்த விவசாயி..." ஈபிஎஸ் பேச்சு

x

விவசாயம் என்பது புனிதமான தொழில், அதனை முதல்வர் ஸ்டாலின் கொச்சப்படுத்தக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், சேவூர் அருகே நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் ஈடி, இன்கம்டாக்ஸ் என எதற்கும் பயப்படாதவன்தான் விவசாயி என்றார். இரவு பகல் பாராமல், ரத்தத்தை வியர்வையாக்கி, மக்களுக்கு உணவளிப்பவனே விவசாயி என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்