இரட்டை தலைமை தீர்ப்பு எதிரொலி - அதிமுக லெட்டர் பேடை தவிர்க்கும் ஈபிஎஸ்
உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் லெட்டர் பேடை மட்டும் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு வருகிறார்...
இரட்டை தலைமை தீர்ப்பு எதிரொலி - அதிமுக லெட்டர் பேடை தவிர்க்கும் ஈபிஎஸ்
உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் லெட்டர் பேடை மட்டும் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில், இரட்டை தலைமை தொடரும் என சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நாள் முதல் தற்போது வரை வாழ்த்து, இரங்கல் அறிக்கை வெளியிடும்போது, கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அசிடப்பட்ட லெட்டர் பேடில் மட்டுமே அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
ஆனால் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற லெட்டர் பேடை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story