"மத்தியிலும் திராவிட மாடல் ஆட்சி அமையும்"- தீயாய் பேசிய எம்.பி. கனிமொழி

x

மத்தியிலும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என, திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் பள்ளக்குறிச்சி ஊராட்சியில், மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியை, மத்திய அரசும் பின்பற்றக்கூடிய நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்