"ஈ.பி.எஸ். நீலிக்கண்ணீர் வடிக்கிறார்" - திமுக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

x

ஆட்சியில் இருக்கும்போது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இழிவுபடுத்துவதும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கபட நாடகம் என்றும் திமுக கூறியுள்ளது.இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக்கூறி எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, 19 ஆண்டுகாலம் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோது, 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்றாக அறிவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் திமுகவுக்கு அளித்து வரும் ஆதரவை கண்டு பொறுக்கமுடியாமல் அதைக் கெடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிப்பதும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்