"5 புதிய மாநகராட்சிகள்.. விரைவில் அறிவிப்பு வரும்.." - மாஸ் அப்டேட் கொடுத்த அமைச்சர்

x

தமிழகத்தில், விரைவில் புதிய மாநகராட்சிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, தமிழகத்தில் மேலும் சில மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே விரைவில் புதிய மாநகராட்சிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்