``கேப்டன் மறைந்து இன்றுடன் 100-வது நாள்" - மனமுடைந்து பேசிய விஜயபிரபாகரன்

x

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் நூறாவது நாள் ஆகும் நிலையில், எவ்வளவோ சோகங்கள் இருந்தும் அத்தனையையும் தனக்குள் வைத்துக் கொண்டு மக்கள் முன்னாள் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உருக்கமாக தெரிவித்தார். விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சாத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவருக்கு கிராம மக்கள் ‌ உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து பேசிய அவர், தேமுதிகவில் இருந்து ஒருவராவது நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பது விஜயகாந்த் விருப்பம் எனவும், அந்த ஆசை நிறைவேறாமல் போன நிலையில், தான் அதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்